Monday, September 21, 2009

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில்

[திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009]
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நிர்வாகம் மற்றும் ஏனைய தரப்புகள், முயற்சித்தும்,வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 74 பேரையும் அழைத்த வந்து படைத்தரப்பு, கைதடி முகாமில் தடுத்து வைத்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 34 பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட 534 பேரை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்த படைத்தரப்பு, யாழ்ப்பாணத்தில் கடற்படைத்தரப்பிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 34 பல்கலைக்கழக மாணவர்களும் தென்மாராட்சியின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 500 பொதுமக்களும் தீவுப்பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் பலர் பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

குறித்த வீடுகளில் இருந்தவர்கள் 1990 ம் ஆண்டுக் காலப்பகுதியில் படை நடவடிக்கை காரணமாக தீவுப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.