Wednesday, May 21, 2008

கேணல் ரமணனின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

[புதன்கிழமை, 21 மே 2008]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் இன்று புதன்கிழமை கேணல் ரமணனின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு விசுவமடு மட்டக்களப்பு - அம்பாறை மாவீரர் மண்டபத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தொடர்பகப் பொறுப்பாளர் இராசு தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பொதுச்சுடரினை ஜெயந்தன் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் நளன் ஏற்றினார்.

ஈகச்சுடரினை மட்டக்களப்பு மாவட்ட மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் ஆனந்தஜோதி ஏற்றினார்.

மலர் மாலையினை மருத்துவ பிரிவுப் போராளி ரவிமோகன் சூட்டினார்.

தொடர்ந்து நினைவுரையினை மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் நிழ்த்தினார்.

சிறப்புரையினை ஜெயந்தன் படையணிப் போராளி குலேந்திரன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் நினைவுரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த சிறந்த தளபதி ரமணன் என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த போது 21.05.06 சிறிலங்காப் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் கேணல் ரமணன் கொல்லப்பட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.