Sunday, December 02, 2007

வன்னியிலிருந்து வவுனியா செல்வதற்குத் தடை விதிப்பு ஓமந்தை ஊடாகச் செல்ல அனுமதியில்லை

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] வன்னியில் இருந்து வவுனியாவுக்கு நோயாளர் தவிர்ந்த பொதுமக்கள் எவரும் ஓமந்தைப் பாதை ஊடாகச் செல்ல முடியாது. அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக் கையை படைத்தரப்பு மேற்கொண்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து அவசர நோயாளர்கள், அரச ஊழியர்கள் மட்டும் ஓமந்தை ஊடாக வவுனியா வருவதற்கு அனுமதிக் கப்படுகின்றனர். வேறு பொதுமக்கள் எவரும் வவுனியா வருவதற்கு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் அனுமதிக்கப் படவில்லை. கொழும்பு வவுனியா ரயில் சேவைகள் அனுராதபுரம்வரை நிறுத்தப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து பொதுமக்கள் வவுனி யாவுக்கு வருவதும் அனுமதிக்கப்பட வில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒரு வர் கொழும்பில் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.