Monday, November 19, 2007

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டமை சிறப்புரிமைகளை மீறும் செயல்: ரணில் குற்றச்சாட்டு

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு உரிமையை மீறும் செயல் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சபாநாயகருடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு உரிமையை மீறும் செயல்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்கவின் மாத்தறையில் உள்ள வீட்டை இராணுவத்தினர் நேற்று மாலை சோதனையிட்டுள்ளனர். இதுவும் முறைகேடான செயலாகும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.