Sunday, November 25, 2007

தமிழீழத் தாயகமெங்கும் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் தொடக்கம்.!

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007] தமீழழத் தாயக விடுதலைப் போராட்டத்தில் தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களை ஒன்று சேரப் போற்றும் போற்றும் மாவீரர்நாளுக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று தொடங்கியுள்ளன. தமிழீழ தாயக மண் எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது. எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாவீரர்களின் திருவுருவப் படங்களைக் கொண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவீரர்களை ஒன்று சேரப்போற்றுவதற்கு தமிழினம் ஆயத்தமாகியுள்ளது. எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கின. காலை 8.30 மணிக்கு பொதுச்சுடரேற்றப்பட்டு தமிழீழத்தேசியக்கொடியேற்றப்பட்டு திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. அரசியல்துறை நடுவப் பணியகம் தமிழீழ அரசியல் துறை நடுவப் பணியகத்தில் மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் பொதுச்சுடரை தமிழீழ மாவீரர்பணிமனை பணிமுதலல்வர் பொன்தியாகம் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார். ஈகச்சுடரை இசைச்செல்வி தமிழ்ச்செல்வன் ஏற்றி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கரின் திருவுருவப்படத்துக்கு பா.நடேசன் ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார். முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதியின் திருவுருப்படத்துக்கு தமிழீழ பெண்கள் மேம்பாட்டுப் பொறுப்பாளர் சு.தமிழினி ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் திருவுருவப்படத்துக்கு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், முதல் தாக்குதல்தளபதி லெப்டினன்ட் சீலன் திருவுருவப்படத்துக்கு தமிழீழ கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன்- கேணல் கிட்டுவின்; திருவுருவப்படத்துக்கு பூநகரி கட்டளைப் பணியகத் துணைத் தளபதி வேந்தன் ஆகியோர் ஈகச்சுடரேற்றி மாலைகளை சூட்டினர். இதைத் தொடர்ந்து மலர்வணக்கம் நடைபெற்றது. 2ம்லெப்ரினன்ட் மாலதி படையணி கிளிநொச்சி நகரத்தில் 2ம்லெப்ரினன்ட் மாலதி படையணியிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான நினைவுமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மாலதி படையணியை சேர்ந்த ஆனந்தி ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை போர்ப்பயிற்சி மகளிர் பொறுப்பாளர் அஜந்தி ஏற்றினார். மாலதி படையணிக் கொடியினை போராளி பிரணவா ஏற்றினார். மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. தமிழீழக் காவல் துறை நடுவப்பணியகம் தமிழீழக் காவல் துறை நடுவப்பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ காவல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் மாதவன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழக் காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவுப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. தமிழீழ நிதித்துறை கிளிநொச்சி நகரத்தில் தமிழீழ நிதித்துறையினால் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுமண்டபத்தில் பொதுச்சுடரினை சேரன் வாணிகப்பகுதியை சேர்ந்த இயலரசன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை சேரன் வாணிப துணைப் பொறுப்பாளர் எழில்வேந்தன் ஏற்றினார். மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு மலர்மாலை சூட்டப்பட்டது. கிளிநொச்சி கோட்ட அரசியல்துறை செயலகம் கிளிநொச்சி கோட்ட அரசியல்துறை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மகளிர் அரசியல்துறையைச் சேர்ந்த குவேனி ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை மகளிர் அரசியல் துறையைச் சேர்ந்த அர்ச்சனா ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச் சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக்கழக நடுவப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர்களில் ஒருவரான றீகன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. தமிழீழ நீதிநிர்வாகத்துறை நடுவப்பணியகம் தமிழீழ நீதிநிர்வாகத்துறை நடுவப்பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன்.தியாகம் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழக் காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் வடபோர்முனை கட்டளை தளபதி கேணல் தீபன் தமிழீழத் தேசியக்கொடியினை ஏற்றி மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தினார். வட்டக்கச்சி வட்டக்கச்சி கோட்ட அரசியல்துறை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக்கழக திட்டமிடல் பணிப்பாளர் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை கோட்டப்பொறுப்பாளர் தயாமோகன் ஏற்றினார். ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையை இராமசாமி சூட்டினார். இராமநாதபுரம் இராமநாதபுரம் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கோட்ட மாணவரமைப்பு பொறுப்பாளர் சஞ்சீவன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை கோட்டக் கல்விக்கழக பொறுப்பாளர் விமல்ராஜ் ஏற்றினார். மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. முழங்காவில் முழங்காவில் கோட்டத்தில் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மலர்விழி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை மன்னார் கிளிநொச்சி மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் அண்ணாதுரை ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை நல்லதம்பி ஏற்றினார்;. ஈகச்சுடரேற்றி மலர்மாலையை கோட்டப்பொறுப்பாளர் குயிலின்பன் சூட்டினார். மல்லாவி மல்லாவி மாவீரர் மண்டபத்தில் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை வணிகர் சங்கத்தலைவர் ஜெயா ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை ஐயன்கன்குளம் வட்டப்பொறுப்பாளர் இறையொளி ஏற்றினார். ஈகச்சுடரேற்றி மலர்மாலையை சங்கர் சூட்டினார். மல்லாவி அங்காடி மல்லாவி அங்காடி பகுதியில் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை 2ம்லெப்ரினன்ட் தங்கமாறனின் தாயார் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை லெப்ரினன்ட் கேணல் ஜெனாவின் தந்தையார் ஏற்றினார். ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டதை தொடர்ந்து மல்லாவி வருவாய்ப்பகுதி ஆளுகை அலுவலர், வணிகர் சங்கச்செயலாளர் சுரேஸ் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். நெடுங்கேணி நெடுங்கேணி கோடாலிக்கல்லு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒலுமடு வட்டப்பொறுப்பாளர் யாழினியன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. பொதுச்சுடரினை காவல்துறையைச் சேர்ந்த பிரவு ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை கோட்டப்பொறுப்பாளர் ஞானம் ஏற்றினார். மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. ஒட்டுசுட்டான் ஒட்டுசுட்டானில் நுண்கலைக்கல்லூரி முதல்வர் கலைக்கதிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மூவேந்தன் ஏற்றினார். தமிழீழத்தேசியக்கொடியினை பரதன் ஏற்றினார். ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டதை தொடர்ந்து இனியவன் கருத்துரை வழங்கினார். கற்விலைமடு கற்விலைமடுவி;ல் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை இரு மாவீரர்களின் தாயார் தவமணி ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை வட்டப்பொறுப்பாளர் ஏற்றினார். ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. மன்னார் மன்னார் ஆட்காட்டிவெளிப்பகுதியில்; பிறையாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை இலுப்பைக்கடவை வட்டப்பொறுப்பாளர் தயா ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை கடற்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் அன்புராஜ் ஏற்றினார். சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலின் மத்தியிலும் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலுப்பைக்கடவை இலுப்பைக்கடவை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை வணிகர் சங்கத்தலைவர் ஏற்றினார். தமிழீழத் தேசியக்கொடியினை ஜெனகன் ஏற்றினார். மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டது. இரணைமடு இரணைமடு பகுதியில் அமைந்துள்ள 2ம்லெப்ரினன்ட் மாலதி நினைவுத்தூபி அருகில் நடைபெற்ற நிகழ்வில் ஈகச்சுடரினை பொருண்மிய மதியுரையகத்தை சேர்ந்த அருள்மணி ஏற்றினார். மலர்மாலையை போராளி வைகயன் சூட்டினார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி மாவீரர் மண்டபத்தில் காண்டீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மருத்துவப்பிரிவு பொறுப்பாளர்களில் ஒருவரான றோமியோ ஏற்றினார். தமிழீழத்தேசியக்கொடியினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி நிர்வாகப்பொறுப்பாளர் தமிழரசன் ஏற்றினார். ஈகச்சுடரினை நிதித்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான மாறன் ஏற்றினார். மலர்மாலையை மாவீரர் அம்பிகைபாலனின் சகோதரி சூட்டினார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி மதிமகன் கருத்துரை நிகழ்த்தினார். தமிழீழ காவல்துறை மாவீரர் பணிமனை தமிழீழ காவல்துறை மாவீரர் பணிமனை பொறுப்பாளர் கண்ணாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை காவல்துறை நிர்வாகத்துறை பொறுப்பாளர் அம்பிகா கிருஸ்ணகுமார் ஜெயசீலன் ஏற்றினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.