Sunday, November 25, 2007

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி- 7 பேர் காயம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007]

கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தர்மபுரம் 8 ஆம் யூனிட் பகுதி பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கீபிர் வானூர்திகள் இக்குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வர்ணலிங்கம், சரஸ்வதி மற்றும் சுமிதா ஆகியோரே குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முருகேசு நடனவதி (வயது 41), கமல்ராஜ் (வயது 29), அரியகுட்டி வேல்முருகு (வயது 60), துரைசிங்கம் லிங்கேஸ்வரன் (வயது 41), தனயோகன் (வயது 18) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இருவரின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவீச்சில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பயன்தரு மரங்கள் சேதமடைந்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.