Monday, November 26, 2007

முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு தேசியத் தலைவர் அகவணக்கம்

[திங்கட்கிழமை, 26 நவம்பர் 2007]

தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2007 நிகழ்வின் ஆரம்ப நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வு வன்னியில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 வீரச்சாவடைந்த லெப். சங்கரின் நினைவு நாள் அன்று தமிழீழ மக்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

முதல் வித்தாகிய மாவீரன் லெப். சங்கரைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைக்காக 19,887 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து போராட்டத்தின் வித்துக்கள் ஆகியிருக்கின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.