Sunday, November 25, 2007

சிங்கள- முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த துணை இராணுவக் குழு

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007] மட்டக்களப்பு, வெலிக்கந்தை பிரதேச முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு முஸ்லிம் இளைஞர்கள் 100 பேரளவில் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாகவும் பயிற்சி பெற்ற வெலிகந்தை பிரதேச சிங்கள இளைஞர்களின் எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கருணா மற்றும் பிள்ளையான் இடையே மோதல்கள் உருவானதையடுத்து ஆயுதப்பயிற்சி பெற்ற பலர் பிள்ளையானுடன் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.