Sunday, November 25, 2007

கனடாவில் தேசியத் தலைவரின் 53 ஆவது பிறந்த நாள் விழா: இயக்குநர் சீமான் பங்கேற்பு

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007]

கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்தும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் பிரபல இயக்குநரும், தமிழின உணர்வாளருமான சீமான் பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று சனிக்கிழமை கனடாவுக்குச் சென்றடைந்த இவரை, "ஈழமுரசு" குடும்பத்தினர் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

தமிழீழ மக்களுக்காகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் துணிந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குநர் சீமான். இவர் அண்மையில் சென்னையில் நடைபெற்ற சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்கக் கூட்ட நிகழ்வில் துணிச்சலாக பல விடயங்களை எடுத்துரைத்திருந்தார். இவரின் இந்த உரைக்கு தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பெரும் பாராட்டுக்கள் கிடைத்திருந்தன.
கனடா, ரொறன்ரோவில் நாளை நடைபெறவுள்ள தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் இயக்குநர் சீமான் பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளதுடன் சிறப்புரையும் ஆற்றவுள்ளார்.

இந்நிகழ்வு மாலை 5:30 மணிக்கு 231 Milner Avenue இல் அமைந்திருக்கும் (Markham /Milner) Sts. Paul & peter Banquet இல் நடைபெறவுள்ளது.

தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அனைத்து ரொறன்ரோ வாழ் தமிழ் மக்களையும் கனடிய "ஈழமுரசு" பதிப்பகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.

நன்றி:புதினம்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.