Sunday, November 18, 2007

புலிகளின்குரலின் வானோசை-17 கலை இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் அறிவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின்குரலின் வானோசை-17 கலை இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தளத்திலும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையில் படைப்புக்கள் வராத காரணத்தால் கிடைத்த படைப்புக்களில் தெரிவான படைப்புக்கு சிறப்புச் சான்றிதழும் பரிசும் வழங்கப்படவுள்ளன.

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கு.செல்வநம்பி எழுதிய "கிபீர்" என்ற சிறுகதை தெரிவாகியுள்ளது.

ஏனைய இரண்டு போட்டிகளும் நடைபெற்றுள்ளன.

தாயகப் படைப்புக்களில்

நாடகத்தில் சி.க.குபேரன் எழுதிய "அடுத்த தலைமுறை" முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டாம் இடம்: ஒட்டுசுட்டானைச் சேர்ந்த வாணி உதயகுமாரன் எழுதிய "அன்புக்காக"

மூன்றாம் இடம்: யோ.புரட்சி எழுதிய "குழந்தையின் பிறப்பும் குழந்தைக்கான இறப்பும்" பெற்றுள்ளன.

சிறுகதைப் போட்டியில்

முதலிடம் தமிழறிவு எழுதிய "மீட்பர்களுக்காக காத்திருக்கிறார்கள்"

இரண்டாம் இடம்: கிளிநொச்சி விவேகானந்தா நகர் பரமசாமி சிறீ சந்திரமோகன் எழுதிய "வீரமுத்தம்"

மூன்றாம் இடம்: கிளிநொச்சி உருத்திரபுரம் கனகரத்தினம் நிசாந்தி எழுதிய "பூ ஒன்று புயலானது".

கவிதையில்

முதலாம் இடம்: 4 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முல்லைக்கோணேஸ் எழுதிய "என் காலப்பணி"

இரண்டாம் இடம்: புதுக்குடியிருப்பு, தேவிபுரத்தைச் சேர்ந்த ந.அகிலன் எழுதிய "இருபத்தொருவர் வணக்கம்"

மூன்றாம் இடம்: கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்த ச.சூசகன் எழுதிய "காதலும் வீரமும்"

ஆகியன தாயகப் படைப்பாளிகளின் போட்டியில் தெரிவாகியுள்ளன.

புலம்பெயர் தளத்தில் வாழும் தமிழர்களுக்கான போட்டியில்

சிறுகதையில்

முதலாம் இடம்: நெதர்லாந்தில் வாழும் சி.பரமானந்தன் எழுதிய "இன்னுமொரு இஸ்ரேல்"

இரண்டாம் இடம்: கனடா, ரொறன்ரோவில் வாழும் மணிமாலா எழுதிய "இழப்பு"

மூன்றாம் இடம்: நோர்வேயில் வாழும் ந.கிருஸ்ணசிங்கம் எழுதிய "அண்ணனின் பணிக்கு"

கவிதையில்

முதலாம் இடம்: பிரித்தானியாவில் வாழும் பொலிகையூர் வசந்தன் எழுதிய "மாமா வருவாயா களம் காண்பாயா"

இரண்டாம் இடம்: ஜேர்மனியில் வாழும் அழலாடி நா.சி.கமலநாதன் எழுதிய "பிறந்தது தமிழீழம்"

மூன்றாம் இடம்: சுவிசில் வாழும் ஈழநிலா எழுதிய "ஈழத்து மாவீரம்" ஆகியன தெரிவாகியுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட இப் படைப்பாளிகள் தமிழீழ தேசியத் தலைவரின் சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெறுகின்றனர்.

நோர்வேயில் வாழும் ந.கிருஸ்ணசிங்கம் எழுதிய "நிழல்" என்ற நாடகம் சிறப்புச் சான்றிதழையும், பரிசையும் பெறுகின்றது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் வானோசை-17 விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் போது சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.