Tuesday, July 31, 2007

தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல்: 3 இராணுவத்தினர் பலி

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007] யாழ். மாவட்டம் தென்மராட்சியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். தென்மராட்சி சாவகச்சேரி வரணிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணியளவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் தேடுதல் நடவடிக்கை நடைபெறுவதாகவும் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து கொடிகாமம் - வரணி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக தென்மராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.