[ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007]
வன்னிப்பகுதிக்கான போக்குவரத்துப் பாதையான ஓமந்தை மற்றும் உயிலங்குளம் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளதனால் உணவுப் பற்றக்குறை உட்பட பெரும் மனித அவலங்களை வன்னிப்பகுதி எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்புக்களிடம் இருந்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பெறப்படும் வரையில் சோதனைச் சாவடிகளில் தமது அதிகாரிகளை நியமிக்க முடியாது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தினால் வன்னிப் பகுதிக்கான உணவு, மருந்து விநியோகங்கள் தடைப்பட்டுள்ளன.
முகமாலை பாதை மூடப்பட்ட பின்னர் வன்னிக்கான பிரதான வழங்கல் பாதையாக ஓமந்தைப் பாதையே இருந்து வந்துள்ளது.
இது தொடர்பில் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னாரி தெரிவித்துள்ளதாவது:
"நாம் பாதையை திறப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளரான தங்கனுடன் கலந்துரையாடி வருகின்றோம். படையினர் தாக்குதலை நடத்தினால் அதில் இருந்து தம்மை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தங்கன் தெரிவித்துள்ளார்.
எனினும் பாதை மூடப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாக தற்போது அரசுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக எமது குழுவினர் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளையும் கடந்த இரவு சந்தித்துள்ளனர். எனினும் அதில் விவாதிக்கப்பட்டவை தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் இல்லை.
எமக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாம் எமது உறுப்பினர்களை அங்கு நிறுத்தப்போவதில்லை. எமது அதிகாரிகளின் உயிர்களை ஒரு ஆபத்தான நிலையில் வைக்க நாம் விரும்பவில்லை. இந்த பாதைகள் மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டால் அது பாரிய உணவு நெருக்கடிகளை வன்னியில் ஏற்படுத்தும்" என்றார் அவர்.
"உயிலங்குளம் பாதை கடந்த 18 ஆம் நாளும், ஓமந்தை பாதை கடந்த செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டன. பாதை மூடப்பட்டதால் உணவு, மண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவந்த 35 பாரஊர்திகள் ஓமந்தை சோதனைச் சாவடிகளில் தரித்து நிற்பதாக" முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
"மேலதிகமாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவந்த 50 பாரஊர்திகள் வவுனியாவில் தரித்து நிற்பதாக" வவுனியா மேலதிக அரச அதிபர் பி.எஸ்.ஏ.சார்ள்ஸ் தெரிவித்தார்.
நன்றி:புதினம்
இரு தரப்புக்களிடம் இருந்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பெறப்படும் வரையில் சோதனைச் சாவடிகளில் தமது அதிகாரிகளை நியமிக்க முடியாது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தினால் வன்னிப் பகுதிக்கான உணவு, மருந்து விநியோகங்கள் தடைப்பட்டுள்ளன.
முகமாலை பாதை மூடப்பட்ட பின்னர் வன்னிக்கான பிரதான வழங்கல் பாதையாக ஓமந்தைப் பாதையே இருந்து வந்துள்ளது.
இது தொடர்பில் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னாரி தெரிவித்துள்ளதாவது:
"நாம் பாதையை திறப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளரான தங்கனுடன் கலந்துரையாடி வருகின்றோம். படையினர் தாக்குதலை நடத்தினால் அதில் இருந்து தம்மை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தங்கன் தெரிவித்துள்ளார்.
எனினும் பாதை மூடப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாக தற்போது அரசுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக எமது குழுவினர் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளையும் கடந்த இரவு சந்தித்துள்ளனர். எனினும் அதில் விவாதிக்கப்பட்டவை தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் இல்லை.
எமக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாம் எமது உறுப்பினர்களை அங்கு நிறுத்தப்போவதில்லை. எமது அதிகாரிகளின் உயிர்களை ஒரு ஆபத்தான நிலையில் வைக்க நாம் விரும்பவில்லை. இந்த பாதைகள் மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டால் அது பாரிய உணவு நெருக்கடிகளை வன்னியில் ஏற்படுத்தும்" என்றார் அவர்.
"உயிலங்குளம் பாதை கடந்த 18 ஆம் நாளும், ஓமந்தை பாதை கடந்த செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டன. பாதை மூடப்பட்டதால் உணவு, மண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவந்த 35 பாரஊர்திகள் ஓமந்தை சோதனைச் சாவடிகளில் தரித்து நிற்பதாக" முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
"மேலதிகமாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவந்த 50 பாரஊர்திகள் வவுனியாவில் தரித்து நிற்பதாக" வவுனியா மேலதிக அரச அதிபர் பி.எஸ்.ஏ.சார்ள்ஸ் தெரிவித்தார்.
நன்றி:புதினம்






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.