தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்த விகாரையில் மல்வத்த மகாநாயக்கர் திப்படுவவெ சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் கூறியதாவது:
150 விடுதலைப் புலி பயங்கரவாதிகள், இராணுவத்திடம் சரணடைந்து விட்டனர். இராணுவத்திடம் சரணடைந்த 6 சிறார்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலி பயங்கரவாதிகள் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆள் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறையில் புலிகள் உள்ளனர். தமிழ் மக்களால் பயங்கரவாதிகள் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் வெற்றியடைந்துவருகின்றன. இருப்பினும் உண்மை நிலையை அறியாமல் இராணுவத்தை இன்னமும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்றார் அவர்.
"கொலை செய்வதை பௌத்தர்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் அமைதியை நிலைநாட்ட இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும்" என்று அஸ்கிரிய மகாநாயக்கர் உடுகம சிறி புத்தரக்கித தேரர் தெரிவித்தார்.
150 விடுதலைப் புலி பயங்கரவாதிகள், இராணுவத்திடம் சரணடைந்து விட்டனர். இராணுவத்திடம் சரணடைந்த 6 சிறார்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலி பயங்கரவாதிகள் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆள் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறையில் புலிகள் உள்ளனர். தமிழ் மக்களால் பயங்கரவாதிகள் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் வெற்றியடைந்துவருகின்றன. இருப்பினும் உண்மை நிலையை அறியாமல் இராணுவத்தை இன்னமும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்றார் அவர்.
"கொலை செய்வதை பௌத்தர்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் அமைதியை நிலைநாட்ட இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும்" என்று அஸ்கிரிய மகாநாயக்கர் உடுகம சிறி புத்தரக்கித தேரர் தெரிவித்தார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.