Tuesday, January 30, 2007

இந்தியாவால் சிறீலங்காவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி.!!!

செவ்வாய் 30-01-2007

சிறீலங்காவின் தெற்குபிராந்திய தொடரூந்து இணைப்பை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவி அளிப்பதாக இன்று இந்தி அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை கடந்த நான்கு வருடங்களில் 281 மில்லியன் அமெரிக்க டொலர்; கடனுதவியாக வழங்கியுள்ளதாகவும் இவை கோதுமை, பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தியதாகவும் இந்தியதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தியாவால் சிறீலங்காவிற்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மற்றும் எண்ணை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் சிறீலங்காவின் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.