Thursday, August 31, 2006

தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க விடுதலைப்புலிகள் தயார். சி.எழிலன். தமிழர் தாயகத்தில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர் ஆரம்பித்துள்ள சூழலில் போர்நிறுத்தத்தின் நிலை குறித்து கண்காணிப்புக் குழுவினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். தற்போதைய களநிலமைகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் கருத்துத் தெரிவிக்கையில் யுத்த சூழல் தோன்றியமைக்கு சிறிலங்கா அரசாங்கமே காரணம் என சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல் மூதூர் கிழக்கில் பொதுமக்களை குறிவைத்து திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களின் விளைவாகவே தற்காப்பின் அடிப்படையிலான மட்டுப்படுத்தப்பட்ட பதில் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர் இவ்வாறான நிலையில் திருகோணமலை துறைமுகத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறிக் கொண்டு மூதூர் கிழக்கை நோக்கிய படையெடுப்பை சிறிலங்கா படையினர் ஆரம்பித்துள்ளமை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும் இருந்த போதிலும் மூதூர் கிழக்கை கைப்பற்றுவதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொள்ளும் சகல படையெடுப்புக்களையும் முறியடிப்பதற்கான உறுதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருக்கின்றனர். சிறிலங்கா படையினரின் யுத்த முன்னெடுப்புக்கள் காரணமாக மூதூர் கிழக்கு ஈச்சிலம்பற்று வெருகல் ஆகிய பகுதிகளில் இருந்து நாற்பத்தாறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள சூழலில் மக்களுக்கான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கி வருகின்றது. என சி. எழிலன் தெரிவித்துள்ளார்.