யாழ்.குடாநாட்டில் நேற்று இரவு கடுமையான எறிகணை வீச்சுக்கள். யாழ்.குடாநாட்டில் நேற்று இரவு புலிகளிற்கும் படையினரிற்கும் மத்தியில் கடுமையான மோதல்கள் இடம் பெற்றுள்ளன. முகாமாலை மற்றும் பளை பகுதிகளை நோக்கி படையினர் எறிகணை மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை தொடுத்ததை அடுத்து புலிகள் பலாலி படைத்தளத்தின் மீது கடுமையான ஆட்லறி தாக்குதலைத் தொடுத்தனர். புலிகளின் எறிகணைகள் பலாலி படைத்தளத்தில் விழ்ந்து வெடித்த அதே நேரத்தில் இடையே படைத்தள பகுதியில் சிறு குண்டுச்சத்தங்களும் தூப்பாக்கி சத்தங்களும் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.





