எனது அரசாங்கத்தை தாக்குதல் மூலம் வெளியேற்ற முடியாது, விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சாதகமாகப் பயன்படுத்தி பதவிக்கு வந்துவிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி எண்ணுமாயின் அது முற்றிலும் தவறானது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கட்டுநாயக்க மீதான வான் தாக்குதலைத் தொடர்ந்து, என்னைப் பதவி விலகும் படியான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நாம் பெரும் போரை நடத்தி வருவதாக அவர்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிரபாகரன் பேசும் மொழியிலேயே அவர்களும் பேசுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என யாராவது எண்ணுவார்களாக இருந்தால். அவர்கள் தாங்கள் வெட்டிய குழிக்குள் வீழ்பவர்கள் ஆவர். தமது சொந்த அரசியல் மூலம் பெரும் தவறை இழைத்தவர்கள் ஆவார்கள் என்றார் அவர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கட்டுநாயக்க மீதான வான் தாக்குதலைத் தொடர்ந்து, என்னைப் பதவி விலகும் படியான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நாம் பெரும் போரை நடத்தி வருவதாக அவர்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிரபாகரன் பேசும் மொழியிலேயே அவர்களும் பேசுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என யாராவது எண்ணுவார்களாக இருந்தால். அவர்கள் தாங்கள் வெட்டிய குழிக்குள் வீழ்பவர்கள் ஆவர். தமது சொந்த அரசியல் மூலம் பெரும் தவறை இழைத்தவர்கள் ஆவார்கள் என்றார் அவர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.