Tuesday, January 25, 2011

ஜே வி பியில் வெளிநாட்டு புலனாய்வு முகவர் ஊடுருவல்! விமல் வீரவன்ச கண்டபிடிப்பு.

ஜே வி பியின் தலைமைத்துவ மட்டத்தில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் உறுப்பினர் ஒருவர் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் வரையறைக்கு உட்பட்டு, குறித்த புலனாய்வு முகவரால் தமது பணிகளை செய்துக் கொள்ள முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அவர் சுகபோகத்துடன் வெளிநாடு ஒன்றில் சென்று குடியேறி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை சோமவன்ச அமரசிங்கவும், டில்வின் சில்வாவும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் எதிர்காலத்தில் எது உண்மை எது பொய் என்பது விளங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.