Tuesday, January 25, 2011

வடகிழக்கில் செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகங்கள் மூடப்படும் நிலையில் இலங்கை வரும் அதன் தலைவர்!

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் டுட்ரே கோனே நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இவர் நாளைய தினம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக கடமையாற்றி வரும் டுட்ரே உலக மனிதாபிமான அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரவுள்ள ட்ரே கோனே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பொருளாதார அபவிருத்தி அமைச்சர் பஸில் ராஜாபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.