Monday, November 26, 2007

தமிழினத்தின் உயிரை உலகத் தமிழினம் வாழ்த்தி நிற்கின்றது

[திங்கட்கிழமை, 26 நவம்பர் 2007]

தமிழீழ மக்களின் தனிப்பெருந் தலைவனின் 53வது அகவையைக் கொண்டாடுவதற்கு உலகத் தமிழினம் இன்று தயாகிவருகின்றது.

தமிழின் உயிராய், தமிழினத்தின் உயிர்ப்பாய், தமிழ்த் தேசியத்தின் ஒப்பற்ற தலைவனாய் தமிழினத்தைத் தாங்கும் ஆணிவேராக தமிழீழத் தேசியத் தலைவர் தோன்றினார்.

எமது தேசியத் தலைவரின் பிறப்பும், வாழ்வும் தமிழினத்தின் சுதந்திரத்திற்காகவும் அமைதி நிறைந்த வாழ்வுக்காகவும் உருக்காக வார்க்கப்பட்ட அர்ப்பணிப்பாகும்.

ஜந்து தசாப்தங்களைக் கடந்து, தமிழினத்தின் விடுதலையே தனது இலட்சியமாக வரித்து எம் தலைவன், இயற்கையின் கொடை.

ஈழப்போர் உச்சம் பெற்று விடுதலையின் வாசலை நோக்கி நகர்ந்து செல்லும் இந்நேரத்தில் எம் தேசியத் தலைவருடன் இணைந்து எங்கள் விடுதலை வென்றெடுப்பதற்கு இன்று உலகத் தமிழினம் களத்திலும் புலத்திலும் எழுச்சியுடன் உறுதிபூண்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.