Tuesday, November 20, 2007

அரசிற்கு எதிரான குழுவே யால தாக்குதல்களுக்கு காரணம்: சரத் பொன்சேகா.!!

[செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2007]

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான குழுவே யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு காரணம் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசாங்கத்திற்கு எதிராக தென்னிலங்கையில் இயங்கிவரும் அரசியல் குழு ஒன்றே அண்மையில் யால மற்றும் ரன்மினிரென்ன பகுதிகளில் நடைபெற்ற கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டு வந்த இராணுவம் மற்றும் காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட இரகசிய அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவையும் பெற்றிருக்கலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.