Monday, September 25, 2006

களுவாஞ்சியில் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் படுகாயம். களுவாஞ்சிக்குடி பட்டியிருப்பு சந்தியல் வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது இன்று திங்கள் காலை 11.00 மணியளவில் ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் எம். டவ்யூ.ஆரியதாச வயது 45 என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.