Thursday, March 17, 2011

பாதுகாப்புக் கட்டமைப்பில் தளர்வும் இல்லை,இராணுவத்தினரின் எண்ணிக்கையில் குறைப்பும் இல்லை- கோத்தாபய

தமிழீழ புலிகளின் சர்வதேச வலையமைப்பின் உதவியுடன் புலிகள் மீண்டும் தலைதூக்க மேற்கொண்டு வரும் முயற்சிகளை முறியடிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து, புலிகளின் பயங்கரவாதம் தோல்வியடைந்துள்ள போதிலும் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்கவோ போவதில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பலருக்கு விருப்பம் இருப்பதாகவும் எனினும் தாம் அதற்கு தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.