நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். மனம் திறந்து உண்மையை கூறுங்கள்.சுவிஷ் செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காய் விரைந்து செயற்படுவோம்…
(13.01.2011) சுவிஸ் அரச குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருடன் தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையில். இப்போது நடைபெற்று வரும் வழக்கு சுவிஸ் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றங்களின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. எனவே சாட்சியம் அளிக்க விரும்புவோர் எந்த வித அச்சமும் இன்றி தாராளமாக முன்வந்து உண்மையான விபரங்களை கூறலாம். நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். இது எந்த வித அரசியல் பின்னணியுமற்ற விசாரணை. எனவே நீங்கள் கூறும் தகவல்கள் எதுவும் ஸ்ரீலங்கா அரசுக்கு எக்காலத்திலும் தெரியப்படுத்தப்பட மாட்டாது. நீங்கள் எதற்கும் அஞ்சாமல் மனம் திறந்து உண்மையை கூறுங்கள்.
செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காய் விரைந்து செயற்படுவோம்…
சுவிசில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த விசாரணைக்கு பொது மக்கள் தமது தரப்பு வாதங்களை தெரிவிக்கும் வகையில் 0800 10 20 60 என்ற இலவச தொலைபேசி இலக்கம் ஒன்றினை சுவிஸ் பாராளுமன்ற வழக்கறிஞர் சபையினர் வெளியிட்டுள்ளனர்.
எனவே தமிழ் மக்களாகிய நாம் 0800 10 20 60 இந்த இலக்கத்துக்கு தொடர்புகொண்டு நாம் எந்த காலகட்டத்திலும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மிரட்டப்படவோ, கட்டாயப்படுத்தப்படவோ இல்லை என்பதையும், நாம் எமது சுய விருப்பத்தின் பேரிலேயே பணம் வழங்கினோம் என்ற உண்மையை தெரியப்படுத்துவோம்.
http://www.eeladhesam.com/

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.