யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இன்று (புதன்கிழமை) அரை நாளுக்குள் ஒன்றரை மில்லியன் (15 இலட்சம்) ரூபா பெறுமதியான உடனடித் தேவைப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளன.
கிழக்கில் தொடரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல இலட்சம் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களின் உடனடித் தேவகைள் சிலற்றை பூர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணர்கள் ஒருங்கிணைப்புடன் யாழ் மக்கள் நிவாரணப் பொருளு;களை சேகரித்து வருகின்றனர்.
உலர் உணவுகள், மருந்துப் பொருள்கள், உடுபுடைகைள், சிறுவர்களுக்கான உணவுகள், பால்மாக்கள் மற்றும் சுகாதார பொருள்கள் என்பனவற்றை தந்துதமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு இணங்க யாழ் மக்கள் தாமாக முன்வந்து பெருமளவு பொருள்களை தமக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் தொடந்தும் தாம் பொருட் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே சேகரிப்பட்ட பொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு குடும்பங்களுக்கு ஏற்றவாறு பொதியிடப்பட்டு நாளை அல்லது நாளை மறுநாள் உரிய மக்களிடம் சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தாம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று காலை முதல் யாழ் நகரை அண்டிய பல்கலைச் சூழலில் நிவாரணச் சேகரிப்பில் ஈடுபட்டு பெற்றுக்கொண்ட பொருள்களை பொதியிட்டு போக்குவரத்து வசதிகளுக்காக காத்திருப்பதாக மேலும் தெரித்துள்ளனர்.
தாயகத்தில் உள்ள நல்லுள்ளம் படைத்தோரும், புலம்பெயர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவ முன்வருமாறும், நிர்கதியாக உள்ள கிழக்கு உறவுகளிற்கு உடனயாக உதவி செய்து, எமது உறவுப் பிணைப்பை வலுப்படுத்த விரைந்து உதவுமாறும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்
அரிஹரன் மற்றும் மாணவர்கள்
தொடர்புகளுக்கு:
0094 77 48 12 791
0094 77 94 52 056
0094 77 65 27 677




No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.