Saturday, December 25, 2010

இந்துசமுத்திரப் பிராந்திய கடற்படையை உருவாக்கத் திட்டம்

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இணைந்து இந்துசமுத்திரப் பிராந்திய கடற்படைப் பிரிவை உருவாக்கவேண்டும் எனவும், கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சிறீலங்கா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் திஸாரா சமரசிங்கா நேற்று (24) தெரிவித்துள்ளார்.

இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதையும், மக்கள் கடத்தப்படுவதையும் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும்.

எனவே இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இணைந்து ஒரு இணைந்த கடற்படைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.