Tuesday, April 06, 2010

சிங்களவரின் கௌரவத்தை ஜனாதிபதி வடக்கிலும் பிரகடனப்படுத்தியுள்ளார்

‘நாம் சிங்களம், நான் சிங்களவன்" ஜனாதிபதி வவுனியாவில் அண்மையில் தெரிவித்த கருத்தை விமர்சித்து அரசாங்கத்திற்கு எதிரான இணையத்தளங்கள் ஜனாதிபதிக்கு எதிராக சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்தில் தான் தவறை காணவில்லை எனவும் ஜனாதிபதி மகிந்த தெற்கில் ஒன்றையும் வடக்கில் ஒன்றையும் தெரிவிக்கும் இரட்டை கொள்கைகளை கொண்ட அரசியல்வாதி அல்ல எனவும் அவர் சிங்களவரின் கௌரவத்தை வடக்கிலும் வெளிகாட்டியுள்ளதாக வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துருகிரியவில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் சாதாரண துன்ப துயரங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்க முடியும். எனினும் மேற்குலக காலனித்துவவாதிகளின் பொறிகளுக்கு சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் விமல் வீரவன்ஸ மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.