Sunday, December 27, 2009

யாழ்ப்பாணம் இந்திய மயமாகின்றதா?, இந்திராகாந்தியின் பெயரில் யாழில் பல்கலைக் கழகம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் ஊடுறுவல் மற்றும் செல்வாக்கு செலுத்துதல் ஆகியன அதிகரித்து வந்ததை உலகமே நன்கு அறிந்திருந்தது.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் அடிக்கடி யாழ்ப்பாணம் சென்ற வருவது மற்றம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அடிக்கடி சந்திப்புக்களையும் கூட்டங்களையும் நடத்துவது போன்ற விடயங்கள் அங்கு நiபெற்று வந்தன.

ஏனைய நாடுகளை விட இந்தியாவிற்கு அதிக சுதந்திரம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கு காட்டுவதும் இந்தியாவின் உதவியின்றி அழிந்து கிடக்கும் யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்ற எண்ணத்தை யாழ் மக்களின் மனங்களில் ஏற்படுத்த முனைந்ததை அனைவரும் நன்க கவனிக்கக் கூடியதாக இருந்தது.

இவ்வாறான நிலையில் தற்பொழுது புதிதான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதான செய்தியாகவே இதை புலம் பெயர்ந்த தமிழர்கள் கருத வேண்டியுள்ளது என எமக்கு கிடைத்த கருத்துப் பரிமாறல்கள் தெரிவிக்கதின்றன.

நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய இந்தியாவின் மத்திய பாராளுமன்ற உறுப்பினரான திரு.சுதர்சன நாச்சியப்பன் பேசுகையில் யாழ்ப்பாணத்தில் அன்னை இந்திராகாந்தியின் பெயரில் மிகப் பெரிய பல்கலைக் கழகம் ஒன்று விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தனது அங்கீகாரத்தை கொடுத்துள்ளதாகவும் இதைப்போலவே யாழ்ப்பாண மக்களின் வாழ்வை மேம்படுத்த பல நல்ல திட்டங்களை இந்திய அரசு அமுல் செய்யவுள்ளதாகவும் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அது நடந்து முடியும் வரையிலும் இந்திய அரசு காத்திருப்பதாகவும் திரு.நாச்சியப்பன் கூறியுள்ளார்.

இந்த தகவல்களைப் பார்க்கும் போது இந்தியாவின் பல தலைவர்களின் பெயர்கள் யாழ்ப்பாண மக்களால் அடிக்கடி உச்சரிக்கப்படும் வகையில் அங்கு ஊடுறுவல் நடைபெறுவதைப் போல தெரிவதாக பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

கனடா உதயன்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.