[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,]
இடம்பெயந்துள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புனேயிடம் இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று கையளித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 600 தொன் இந்திய நிவாரணப் பொருட்கள் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
உலர் உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், துணிகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், காலணிகள் உட்பட பல பொருட்கள் இவ் நிவாரணப் பொருட்களில் அடங்குவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு தேவையான வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஊடாக தற்போது இடம் பெயர்ந்து வாழும் மற்றும் ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இவை விநியோகிக்கப்படும் என ஐ.நா. கொழும்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை கூறுகின்றது.
குறிப்பாக வடக்கில் 180 நாள் கால அவகாசத்திலான மீள் குடியேற்றத் திட்டத்திற்கு உதவும் வகையில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இந்த நிவாரண உதவியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இது தொடர்பாக ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே கூறுகின்றார்.
Tuesday, August 18, 2009
600 தொன் இந்திய நிவாரணப் பொருட்கள் ஐ.நா வதிவிட பிரதிநிதியிடம் கையளிப்பு
[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,]
இடம்பெயந்துள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புனேயிடம் இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று கையளித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 600 தொன் இந்திய நிவாரணப் பொருட்கள் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
உலர் உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், துணிகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், காலணிகள் உட்பட பல பொருட்கள் இவ் நிவாரணப் பொருட்களில் அடங்குவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு தேவையான வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஊடாக தற்போது இடம் பெயர்ந்து வாழும் மற்றும் ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இவை விநியோகிக்கப்படும் என ஐ.நா. கொழும்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை கூறுகின்றது.
குறிப்பாக வடக்கில் 180 நாள் கால அவகாசத்திலான மீள் குடியேற்றத் திட்டத்திற்கு உதவும் வகையில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இந்த நிவாரண உதவியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இது தொடர்பாக ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே கூறுகின்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.