Tuesday, December 04, 2007

யாழில் நாளாந்தமும் 6 பேர் கொல்லப்படுகின்றனர்: நா.உ. மகேஸ்வரன்

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007]

யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் ஆறு பேரை சில ஆயுதக்குழுக்கள் படுகொலை செய்து வருவதுடன், வீடுகளிலும் கொள்ளையடித்து வருகின்றனர் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று திங்கட்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகள் தொடர்பான தகவல்களை நான் நேற்று வரை வெளியிடாது தவிர்த்து வந்திருந்தன். நான் இதனை நீண்டகாலம் பேசவும் இல்லை. ஆனால் இன்று அதனை தெரிவிக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 6 பொதுமக்களாவது நாளாந்தம் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த படுகொலைகளைச் செய்யும் குழுக்களுக்கு வர்த்தகர்களும், உயரதிகாரிகளும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இது இறைவன் மீது ஆணையாக உண்மையான தகவல் (அவர் கடவுளின் உருவத்தையும் கையில் பிடித்திருந்தார்).

இளம் பெண்கள் உள்ளிட்ட 400 பொதுமக்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் அன்றாட கடமைகளை செய்வதற்கான வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. உடுத்த உடையுடனேயே இளம் பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலமை மிகவும் மோசமானது. அங்கு கழிப்பறை வசதிகளும் இல்லை என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.