Tuesday, December 04, 2007

102 தமிழர்கள் சிறையிலடைப்பு- 100 தமிழர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007]

சிறிலங்காவின் பாதுகாப்புக்காக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் 102 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் 100 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது:

விசாரணைக்காக மொத்தம் 2,554 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 2,350 பேர் விடுவிக்கப்பட்டுளனர். 2,189 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

202 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 102 பேர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

100 பேர் தொடர்ந்தும் அனைவரும் பூசா முகாமிலும் காவல் நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டோரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 87. மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 30.

அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியாவிலும் கூட இப்படியான கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சிலர் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.