Friday, November 30, 2007

மலேசியத் தமிழர்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை: தமிழ்நாடு முதல்வர் கலைஞர்

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007]

மலேசியத் தமிழர்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அளித்துள்ள பதில்:

கேள்வி: மலேசியா நாட்டில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து, பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதைத்தொடர்ந்து, மலேசியா அமைச்சர் ஒருவர் நீங்கள் அப்படி பேசியிருக்கக்கூடாது என்றும், அங்கேயே பிரச்சினை அதிகமாக இருப்பதாகவும் உங்களைப்பற்றி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் மலேசிய நாட்டு அரசைப்பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. அங்கே உள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும் என்றுதான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி: மலேசிய அமைச்சரைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: அதற்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. பிரதமருக்கு தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை. தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அந்தக் கடமையைச் செய்து இருக்கிறேன். மற்றபடி இந்தப் பேச்சுக்கெல்லாம் பதிலுக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்றார் கலைஞர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.