Tuesday, November 27, 2007

[திருத்தம்]-சிறிலங்கா இராணுவத்தினரால் 7 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் 7 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் மேற்கில் உள்ள ஐயன்கேணியில் இன்று செவ்வாய்க்கிழமை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவீரர் நாளையொட்டி தமது உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்துவதற்காக பாடசாலைச் சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் வானில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை இலக்கு வைத்து கொக்காவில்- துணுக்காய் வீதியில் இன்று முற்பகல் 11:30 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.