சிறிலங்கா வான்படையின் மிக் 27 தாக்குதல் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வன்னி வான்பறப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படைத்தளத்தை தாக்குவதற்காக சிறிலங்கா வான்படையின் மிக் 27 வகை விமானங்கள் வந்தன.
அவற்றின் மீது விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படையினரின் தானியங்கிப் பீரங்கிகன் நடத்திய இத் தாக்குதலில் மிக் 27 விமானம் சிக்கியது.
இதனால் கடுமையாகச்சேதமைடந்த மிக் 27 விமானம் வேகமாகப்பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப்பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.