அரசாங்கத்தில் இணைய ஐ.தே.கவுக்கும் மகிந்த அழைப்பு: ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு சிறிலங்கா அரசாங்கத்தில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்யவிடம் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச கடிதம் கொடுத்தனுப்பினார்.
அரசாங்கத்தின் அமைதி முயற்சிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைக் கோரும் கடிதம் அது என்று முதலில் கூறப்பட்டதாகவும் ஆனால் அது உண்மையில்லை. அரசாங்கத்தில் இணைவதற்கு அழைப்பு விடுத்தே மகிந்த எழுதிய கடிதம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயிலிருந்து ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா திரும்பியதும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மகிந்த ராஜபக்சவின் இந்த அழைப்பு குறித்து ஜே.வி.பி. கடும் அதிருப்தியடைந்துள்ளது. அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதைத் தடுப்போம் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜே.வி.பி. தனது முக்கிய நிபந்தனைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் ஜே.வி.பி. இல்லமல் புதிய கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவும் தான் தயாராக இருப்பதாக ஜே.வி.பி.யினரை மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.