Tuesday, August 29, 2006
பலாலி விமானத் தளத்துக்கருகில் நிலக்கீழ் பதுங்கு குழிகளை படையினர் அமைத்து வருகின்றனர்.
பலாலி விமானத்தளத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விமானத் தளத்துக்கருகில் நிலக்கீழ் பதுங்கு குழிகளை படையினர் அமைத்து வருகின்றனர். கடந்த 11ஆம் திகதி முதல் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் குடாநாட்டில் இடம்பெற்றுவந்த மோதலையடுத்து பலாலி விமானத்தளம் மீது புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இதனால் படையினரின் விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.சில தினங்களுக்கு முன்னரே விமானங்கள் பலாலி விமானப்படைத்தளத்தில் தரையிறங்க ஆரம்பித்தன. நேற்று பலாலி விமானப் படைத்தளத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து ஆயுததளவாடங்கள் இறக்கப்பட்டதாகவும் காயமடைந்த படையினர் ஏற்றப்பட்டதுடன் படையினரது சடலங்களும் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ராய்ட்டர் செய்தி தெரிவிக்கின்றது. காயமடைந்த 12 படையினரே விமான மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.