தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியமானதாகும். ஆனாலும், அரசுடன் ஒட்டிக் கொண்டு தமிழ்க் கட்சிகளுடன் கூட்டு என்பது இரண்டு வள்ளங்களில் பயணிக்க முயற்சிப்பதற்கு ஒப்பானது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என ஈ..பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழர் பிரச்சினை என்னும் போது நாம் கட்சிகளாக வேறுபட்டு நிற்பது அனுகூலமானதல்ல என்ற போதிலும் அரசுடன் ஒட்டிக் கொண்டுள்ள கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது சாத்தியமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
எமக்கிருக்கின்ற பிரச்சினைகளைப் பெரும்பான்மைச் சமூகம் புரிந்து கொள்வதாகவும் இல்லை. அவ்வாறு புரிந்து கொண்டாலும் அதனைத் தீர்க்கும் எண்ணம் அவர்களுக்குக் கிடையாது எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்தில் ஒருகாலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் இன்னொரு காலும் பதித்து, இரண்டு வள்ளங்களில் பயணிக்க முயற்சிப்பது அரசியல் தீர்விற்குத் தடையாகவே இருக்கும் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.