இந்தியாவின் சட்ட மாமேதை அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து இன்று கலைஞர் கருணாநிதி உயர்நீதிமன்ற விழாவில் கலந்து கொண்டார்.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் கருணாநிதி பேசத் துவங்கியதும் சில வழக்கறிஞர்கள் கருப்புக் கொடியை எடுத்துக் காட்டி எதிர் கோஷங்கள் இட்டனர். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்கள் போலீசால் தாக்கப்பட்ட நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடந்தது.
இந்நிலையில் திமுக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டதோடு. அதைப் படம் பிடித்த ஜெயா டி.வி ,லைவ் இந்தியா, என்.டி.டி.வி தொலைக்காட்சி போன்றவற்றின் நிருபர்களை தாக்கியதோடு அவர்களின் ஒளிப்பட கேமிராக்களும் உடைத்தெறியப்பட்டன. கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியதாக ஆறு வழக்கறிஞர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
ஆனால் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரையோ ஊடக நிருபர்கள் கொடுத்த புகாரையோ இது வரை போலீஸ் பெற்றுக் கொள்ளவும் இல்லை. யார் மீதும் வழக்குப் பதிவும் செய்யவில்லை. இந்நிலைக்கு தமிழகத்தின் பல் வேறு ஊடக சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.