Wednesday, April 28, 2010

இமாச்சலில் பதுங்கியபோது 174 தடவை பேசினார் ; நித்யானந்தா-ரஞ்சிதா செல்போன் உரையாடல்:-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்.

நித்யானந்தாவை தொடர்ந்து நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதற்கான முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக நித்யானந்தா கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார். போலீசார் அவரிடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது ஆசிரமத்துக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டது அதற்கான பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது, வெளிநாட்டில் நன்கொடை திரட்டியது, சொத்துக்கள் வாங்கி குவித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடத்தினார் கள்.

இதற்கிடையே நித்யானந்தா சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகள் வெளியாக முக்கிய காரணமாக இருந்த அவரது முன்னாள் கார் டிரைவர் லெனின் கருப்பனை பெங்களூருக்கு வரவழைத்து போலீசார் வாக்குமூலத்தை பெற்று இருக்கிறார்கள்.

அடுத்ததாக நித்யானந்தாவுடன் ஆபாச காட்சியில் இருந்ததாக கூறப்படும் நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆபாச காட்சிகள் வெளியான பிறகு நடிகை ரஞ்சிதாவின் சென்னை வீடு பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.

இதையடுத்து கர்நாடக போலீசார் அவரை தேடிப்பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக் கும் என்று போலீசார் எதிர் பார்க்கிறார்கள். ரஞ்சிதாவுக்கு ஆசிரமத்தில் அதிக செல்வாக்கு இருந்துள்ளது. நித்யானந்தா அறைக்கு எப்போது வேண்டுமானாலும் அவர் சென்று வர விசேஷ அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பண விவகாரங்கள் மற்றும் ஆசிரமத்தில் மர்மமாக நடந்த அத்தனை விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு முழுமையாக தெரியுமாம். நித்யானந்தாவுக்கு எதிராக எதுவும் சொல்லவேண்டாம் என்று ஆசிரமத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் அதற்காக பேரம் பேசப்பட்டு இருக்கலாம் என்றும் கர்நாடக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால்தான் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரஞ்சிதாவை பிடித்து விசாரித்தால் நித்யானந்தா பற்றி மேலும் பல திடுக் கிடும் உண்மைகள் வெளி வரும் என்று போலீசார் நம்புகின்றனர். நித்யானந்தா உண்மைகளை மறுத்தால் அவரைப் பற்றிய மர்மங் களை ரஞ்சிதா மூலம் வெளிக் கொண்டு வருவோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இமாசலப்பிரதேசத்தில் நித்யானந்தா தங்கி இருந்த போது ரஞ்சிதாவுடன் 175 தடவை செல்போனில் பேசியுள்ளார் என்றும் அவர் கூறினார். 7 செல் போன்களில் இருந்து மாறி மாறி பேசினாராம். ரஞ்சிதா வை தேடும் வேட்டை நடக்கிறது. அவர் பதுங்கி உள்ள இடத்தை நெருங்கி விட்டோம். ஓரிரு தினங்களில் பிடித்து விடுவோம் என்று போலீஸ் அதிகாரி கூறனார். தனிப்படை அமைத்து அவரை தேடுகிறார்கள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.