இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று திருப்பதி கோவிலுக்கு வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் ஆர்வலர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக 3 நாள் புனிதப் பயணமாக நேபாளம் சென்ற அவர் கொழும்பு திரும்பினார். இந் நிலையில் இன்று சிறப்பு விமானம் மூலம் அவர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்று , அங்கிருந்து அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு செல்கிறார்.
மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அவரது வருகையையொட்டி ரேணிகுண்டா, திருப்பதி, இடையிலான பாதை முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரேணிகுண்டாவில் இருந்து ராஜபக்ச திருப்பதி செல்லும் வழி நெடுகிலும் பொலிஸார் நிறுத்தப்படவுள்ளனர்.
ராஜபக்சவின் வருகை கடந்த மாதமே முடிவு செய்யப்பட்ட போதிலும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கடைசி நேரம் வரை மத்திய அரசு இரகசியம் காத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசும் இது குறித்து மூச்சுவிடவில்லை.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.