இராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொதியை சிறைக்காவலர்கள் சோதனை செய்ய முயன்றபோது அதை இராஜேஸ்வரி மற்ற ஒரு சிறைக் கைதியிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் இரண்டாவது சிறைக்கைதி பெண்ணிடமிருந்து அதைக் கைப்பற்ற முனைந்த போது தாம் வைத்திருந்த சிம் கார்டை அவர் கடித்துச் சேதப்படுத்திவிட்டார் என்று தெரிகிறது.
எனினும் சிறைக் காவலர்கள் சிம் கார்டைக் கடைசியில் கைப்பற்றினார்கள். ஆனால் சிம்கார்ட் மூன்று துண்டுகளாக கடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
அதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பு, மற்றும் உள்வாங்கப்பட்ட தொலைபேசி அழைப்பு என்பனவற்றையும், மற்றும் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொலைபேசி இலக்கத்தையும் இனி கண்டறிதல் மிகக் கடினமானதாக இருக்கும்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.