[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] சிறீலங்கா அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளும், கால அவகாசமும் இருப்பதாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் ஜான் எக்லண்ட் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக ஏ.எப்.பி செய்தி சேவைக்கு நேற்று வழங்கிய செவ்வியில் ஏக்லண்ட இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளதுடன், சமாதான முயற்சிகள் முறிந்துவிடவில்லை எனவும் கூறினார். இருப்பினும் தனது அனுபவத்தின் அடிப்படையில் சமாதானத்திற்கான சூழல் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் எனவும் ஏக்லண்ட் தெரிவித்தார். அரசாங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் மட்டும் 2006ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி முதல் தற்பொழுதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கொல்லப்பட்டவர்களின் உண்மையான தொகை இதனைவிட ஆதிகமாகும். பல வருடங்களாக இடம்பெற்ற போரின் பின்னர் இரு தரப்பும் இராணுவ நடவடிக்கை மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது எனக் கூறிவரும் நிலையில், அமைதி முயற்சியை முன்னெடுப்பது பற்றி ஆராயவ்தே சிறந்த வழி எனவும் எக்லண்ட் கூறினார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் இன்று வன்னிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியாகியுள்ள போதிலும், அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை வெறும் தாளில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறீலங்காவில் அமைதி முயற்சிகளை நோர்வே ஆரம்பித்தபோது, ஜான் எக்லண்ட் நேர்வேயின் உதவி வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாக் கி மூனிற்கு, இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசகராக கடந்த மார்ச் மாதம் முதல் ஜான் எக்லண்ட் பதவி வகித்து வருகின்றார். -பதிவு
Wednesday, August 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.