[ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சென்னையில் "றோ" (இந்திய உளவு அமைப்பு) முன்னாள் அதிகாரி கௌரி மோகன்தாஸ் (வயது 44) கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளுக்கு உதவிவரும் மற்ற 4 றோ அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்தியப் புலனாய்வுத் துறையினர் (சி.பி.ஐ) தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னையில் நான்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த கௌரி மோகன்தாஸ் என்ற றோ முன்னாள் அதிகாரி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்த 1987-1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் றோ அதிகாரியாக அவர் பணியாற்றினார். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் தொடர்பிலான விளக்கப் புத்தகங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றை வழங்கியது, பணப் பரிமாற்ற உதவி செய்தமை என கௌரி மோகன்தாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கௌரி மோகன்தாசின் வீட்டை சோதனையிட்ட புலனாய்வுத்துறையினர், அங்கு ஆயுதங்கள் தொடர்பிலான விளக்கப் புத்தகங்களையும் றோ தொடர்பிலான முக்கியமான உளவு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். சில உளவு ஆவணங்களை விடுதலைப் புலிகளுக்கு கௌரி மோகன்தாஸ் விற்பனை செய்திருக்கக்கூடும் என்று புலனாய்வுத்துறையினர் நம்புகின்றனர். அவரது வங்கிக் கணக்கையும் சோதனையிட உள்ளனர். இந்திய அமைதிப் படை காலத்தில் பணிபுரிந்த மேலும் 4 றோ அதிகாரிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்து வருவதாக அனாமதேய தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இந்தியா மற்றும் இலங்கையில் பாரதூரமான பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருகலாம் என நம்புகிறோம் என்று இந்தியப் புலனாய்வுத் துறையினர் வட்டாரங்கள் கூறின என்று கொழும்பு ஆங்கில ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி : புதினம்
Sunday, August 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.