[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007] வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் இடையிலான எல்லை நெடுக, இரு புறங்களிலும், இரு தரப்பினரும் பெரும் யுத்த ஆயத்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு புறங்களிலும் படை மற்றும் ஆயுதத் தளபாடக் குவிப்பில் இரண்டு பக்கத்தினரும் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், அந்த எல்லை நெடுகிலும் அவ்வப்போது மோதல்களும் தொடர்ந்து வெடித்து வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை மேற்கில் கள்ளிக்குளம் மற் றும் தம்பனைப் பகுதிகளில் ஞாயிறு இர வும் நேற்று அதிகாலையும் மோதல்கள் இடம்பெற்றன. இச்சண்டையில் புலிகள்தரப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்றும், ஐந்து படையினர் காயமுற்றனர் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். எனினும் ஞாயிறு இரவு நடந்த மோதல்கள் குறித்துப் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வத் தகவல்கள் எதுவும் இச்செய்தி அச்சுக்குப் போகும்வரை வெளி யாகவில்லை. ஆனால் மன்னார், வவுனியா மாவட்டப் பிரதேசங்கள் நெடுகிலும் இரு தரப்பு எல்லைப் புறங்களை ஒட்டி ஆங்காங்கே மோதல்கள் தொடர்ந்து அவ்வப்போது இடம் பெற்று வருவதைப் புலிகளின் தரப்பு ஊர் ஜிதப்படுத்தியது. இந்த மோதல்கள், இப்பிரதேசத்தில் பெரும் இராணுவத் தாக்குதல் நடவடிக்கை களுக்கான முன்னெடுப்பா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனப் புலிகளின் வட்டாரங்கள் மேலும் கூறின. இந்த எல்லையை ஒட்டி பெரும் யுத்தத் தயாரிப்புகளில் இரு தரப்பினருமே ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுவதை அந்த வட்டாரங்கள் மறுக்கவில்லை. மடுத்தேவாலய உற்சவத்தை ஒட்டி இந்த மாத நடுப்பகுதியில் இப்பிரதேசத்தில் சற்றுத் தணிந்திருந்தது போலகாணப்பட்ட யுத்த முஸ்தீபுகள், இப்போது மீண்டும் முழு அளவில் சூடு பிடித்து முடுக்கி விடப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்பட் டது. புதிய போர் முனைகள் வன்னியை அண் டித் திறக்கப்படக்கூடும் என்ற சந்தேகத்தை இந்த எல்லைப் புறம் நெடுகிலும் இடம்பெற்றுவரும் படைக்குவிப்பும், யுத்த ஆயத்த ஏற்பாடுகளும் உருவாக்கிவருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. -உதயன்
Tuesday, August 28, 2007
வவுனியா மன்னார் எல்லைப் புறத்தில் இரு தரப்புகளும் படைகளைக் குவிக்கின்றன
Tuesday, August 28, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.