Thursday, August 30, 2007

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய விசா அலுவலகம் சென்னைக்கு மாற்றப்படவுள்ளது

[வியாழக்கிழமை 30 ஓகஸ்ட் 2007]

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கொழும்பிலுள்ள தனது விசா அலுவலகத்தினை மூட தீர்மானித்துள்ளதுடன் அவ் அலுவலகத்தை சென்னைக்கு மாற்ற உத்தேசித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


இது தொடபாக மறுபரிசீலணை செய்யப்படுவதாகவும் இவை பூர்த்தியான பின்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிக்கும் என உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் ஜோன் குலி டெய்லி மிரரிற்கு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் குறித்து ஜோன் குலி மேலதிக தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை செப்டெம்பர் மாதம் தூதரகம் அறிவிக்குமென அவர் தெரிவித்துள்ளார்.


கொழுபிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தனிகராலயத்தின் விசா அலுவலகத்திற்கு பெருமளவான விசா விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுவதால் அவை பரிசீலணை செயவதற்கு விசே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் விசா தொடர்பான விடயங்கள் தற்போது கொழும்பு டுப்ளிகேசன் வீதியிலுள்ள தனியார் முகவர் நிலையம் ஒன்றிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.