[வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007]
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காணும் முயற்சியாக ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அரசுக்கும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஏண்டனி ஆகியோர் அரசின் சார்பில் கலந்துகொண்டனர். இடதுசாரிகளின் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், தேசியச் செயலர் டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இருதரப்பு உடன்படிக்கையில் உள்ள சில அம்சங்கள் குறித்து இந்தக் கமிட்டி ஆய்வு செய்யும் என்றும், 123 உடன்படிக்கையின் மீது ஹைட் சட்டத்தின் தாக்கம், அணுசக்தித் துறையில் சுயசார்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்த உடன்படிக்கையின் தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்மென்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
ஆனால் இந்தக் கமிட்டியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இந்தக் குழு இருக்கும் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
Friday, August 31, 2007
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அணு ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கருத்து வேறுபாடுகளை களைய குழு அமைக்க முடிவு
Friday, August 31, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.