Monday, August 27, 2007

வன்னியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம்: கோத்தபாய

[திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2007]


வன்னிப் பெருநிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் குடிமக்கள் சிறப்புப் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை கல்கிரியகம பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கோத்தபாய ராஜபக்ச பேசியதாவது:

கிழக்கின் வெற்றியைத் தொடர்ந்து வன்னியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்போம்.

சிறிலங்கா இராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர். கிழக்கை மீண்டும் புலிகள் கைப்பற்ற அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது.

விடுதலைப் புலிகளின் கடந்த கால உத்திகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம்.

இந்தத் தீவில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க தெளிவான உத்தரவுகளை எமக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்துள்ளார் என்றார் கோத்தபாய.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.