Wednesday, August 29, 2007

மருந்துப் பொருட்களுக்கு அனுமதி மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] வவுனியா வடக்கு புளியங்குளம் மற்றும் நெடுங்கேணி மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துப்பொருட்களை எடுத்து வருவதற்கு சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அந்த மருத்துவமனைகளுக்கான மருந்துப் பொருட்களை எடுத்துவர கடந்த நான்கரை மாதங்களுக்கு மேலாக தாம் காத்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலாம் காலாண்டுக்குரிய மருந்துகள் முழுமையாக வந்தடையாத நிலையில், இரண்டாம் காலாண்டுக்குரிய மருந்துகள் அறவே வந்தடையவில்லை என்றும், இதனால் தம்மால் உரிய மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்க முடியவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.