Friday, August 31, 2007

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கை முறியடிப்பு

[வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007] மன்னார் விளாத்திக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியடித்துள்ளனர். மன்னாரின் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். செறிவான எறிகணைச் சூட்டாதரவு மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் விளாத்திக்குளம் பகுதியில் இராணுவத்தினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கையானது பிற்பகலில் முறியடிக்கப்பட்டது. இதில் இராணுவத்தினருக்கு சேதங்கள் மற்றும் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.