Thursday, July 19, 2007

யாழில் கறுப்புக் கொடி- சிறிலங்கா தேசியக் கொடி ஏற்ற அதிகாரிகள் மறுப்பு

[வியாழக்கிழமை, 19 யூலை 2007,] சிறிலங்காவின் கிழக்கின் உதயம் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காவின் அரசாங்க தினைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச கட்டிடங்களில் சிறிலங்காவின் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் எந்தவொரு திணைக்களத்திலும் அந்நாட்டுத் தேசியக் கொடிகள் ஏற்றப்படவில்லை. சில அரசாங்க அதிகாரிகளிடம் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினர் அழுத்தங்கள் கொடுத்த போதிலும் அதனை அவர்கள் நிராகரித்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன. மேலும் வீதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்ததுடன் உந்துருளி அணியினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தது. யாழ். பல்கலைக்கழக சுற்றாடலிலும் சிறிலங்கா இராணுவத்தினர் மிகக் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனிடையே வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய வருடாந்த கொடியேற்ற விழாவுக்குச் சென்ற பொதுமக்களிடத்தில் தெல்லிப்பளை சிறிலங்கா சோதனை நிலையத்தில் மிகக் கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதியவர்கள் மற்றும் பெண்களும் உடற்சோதனை மற்றும் அடையாள அட்டைகள் கையளித்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் கடும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.